அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.
Lord Arthanareeswarar Temple
Tiruchengode, Namakkal (Dist), Tamilnadu.
தமிழ் முதல் பக்கம்
இணையதளம் முதல் பக்கம்
View Website in English
ஸ்தல வரலாறு
அமைவிடம்
வரலாறு
படிவழிப் பயணம்
மற்றவை
சிறப்புகள்
தோற்றமும் அமைப்பும்
சிறப்புகள்
இறை வழிபாடு
ஸ்தலப் பெருமை
மலையின் மறு பெயர்கள்
மண்டபங்கள்
பேருந்து வசதி
நகரின் குறிப்பு
ஸ்தல விருட்சம்
கோபுரம்
நிர்வாக அமைப்பு
நகரின் சிறப்பு
வரடிக்கல்
ஸ்தல மூர்த்திகள்
அர்த்தநாரீஸ்வரர்
உருவ அமைப்பு
நாகாசலத்தில் எழுந்தருளல்
பூஐைகள்
பிருங்கி மகரிஷி
செங்கோட்டுவேலவர்
ஆதிகேசவபெருமாள்
சிறப்பம்சங்கள்
மற்ற சுவாமிகள்
திருவிழாக்கள்
வைகாசி விசாகம்
திருத்தேரின் தோற்றம்
பிற விழாக்கள்
மாதந்தோறும்
நாகேஸ்வரர் பூஜை
நாகபஞ்சமி
படித்திருவிழா
கேதார கெளரி விரதம்
மாசிமகம்
கார்த்திகை தீபம்
சித்ரா பௌர்ணமி
மார்கழித்திங்கள் வழிபாடு
சிவராத்திரி வழிபாடு
வைகுண்ட ஏகாதசி விழா
பிற விபரங்கள்
வரலாற்று முக்கிய நிகழ்வுகள்
குளிர்சுரம் நீக்கிய வரலாறு
கல்வெட்டுகள்
தீர்த்தங்கள்
கிரிவலம்
பிரதோசமகிமை
திருப்பணிகள்
சிற்ப்பக்கலைகள்
நூல்கள்
சுற்றுலா தகவல்
பக்தி பாடல்கள்
திருக்கோயில் வழிபாட்டு முறை
முக்கிய நிகழ்வுகள்
மலைப்பாதையில் மண் சரிவு
108 சங்குகள் அபிஷேகம்
தங்கரதம்
தங்க கொடிமரம்
கும்பாபி்ஷேகம்
திருமலை கும்பாபி்ஷேகம்
உச்சிபிள்ளையார்
துணை கோவில்கள்
முத்துக்குமாரசுவாமி கோவில்
ஜல பூஜை
63 நாயன்மார்கள்
புகைப்பட தொகுப்பு
சுவாமிகள்
அர்த்தநாரீஸ்வரர்
செங்கோட்டுவேலவர்
ஆதிகேசவபெருமாள்
சுவாமிகள் வாகன உலா
மற்ற சுவாமிகள்
முக்கிய நிகழ்வுகள்
தங்கத்தேர்
தங்க கொடிமரம்
திருமலை கும்பாபி்ஷேகம்
உச்சிபிள்ளையார் கும்பாபி்ஷேகம்
துணைகோவில்கள் கும்பாபி்ஷேகம்
ஐல பூஐை
63 நாயன்மார்கள்
வரலாற்று புகைப்படங்கள்
துணை கோவில்கள்
கையிலாயநாதர் ஆலயம்
பத்ரகாளியம்மன்
புகைப்பட தொகுப்பு
நவராத்திரி கொழு 2010
குடமுழுக்கு 2010
பெரிய மாரியம்மன்
ஆபத்து காத்த விநாயகர்
ஆறுமுக சுவாமி
ஓங்காளியம்மன்
குண்டம் திருவிழா 2015
குண்டம் திருவிழா 2012
குண்டம் திருவிழா 2011
பிற கோவில்கள்
ஐயப்பன் மண்டல பூஜை 09
பெருமாள் (CHB COLONY)
அக்ரஹார ஆஞ்சநேயர்
பிற கோவில்கள்
வைகாசி விசாகம்
2015
2014
2013
2012
2011
2010
2009
2008
கார்த்திகை தீபம்
2014
2012
2011
நாகேஸ்வரர் பூஜை
2015
2010
2009
2008
நாகபஞ்சமி
2015
2010
2012
2009
2008
மாசிமகம்
2015
சித்ரா பௌர்ணமி
2010
கேதார கெளரி விரதம்
2013
மற்ற விழாக்கள்
படித்திருவிழா
வீடியோ தொகுப்பு
முக்கிய நிகழ்வுகள்
இணையதள சேவைகள்
சிறப்பம்சங்கள்
காலண்டர் பதிப்புகள்
குறுந்தகடு (DVD)
தொடர்பு கொள்க
குளிர் சுரம் நீக்கிய வரலாறு
சீர்காழியில் பார்வதி தேவியாரிடம் ஞானப்பால் அருந்திய
திருஞானசம்பந்தர்
கொங்கு நாட்டில் தலயாத்திரை செய்தார். அச்சமயம் தனது அடியார் புடைசூழ திருச்செங்கோடு வருகை தந்தார். அது ஒரு பனிக்காலம் பனி அதிகம் பொழிந்தமையால் கொங்கு மண்டல மக்கள் பலர் குளிர் சுரம் என்னும் காய்ச்சலால் அவதிப்பட்டனர். மக்களை வாட்டிய குளிர்சுரம் ஞானசம்பந்தரின் உடன் வந்த அடியார்களையும் பற்றியது. அதனால் அடியார்களும், மக்களும் ஞானசம்பந்தரிடம் எடுத்து கூறி இந்நோயை போக்கும்படி வேண்டினர். அதனை அறிந்த ஞானசம்பந்தர்
அவ்வினைக்கிவ்வினை என துவங்கும் திருநீலகண்ட பதிகம் பாடி தீவினை தீண்டப்பெறா நீலகண்டனே
என கட்டளை இட்டார். இப்பிணி அன்றேஅந்நாட்டை விட்டு அகன்றது. பின்னர் அம்மையப்பனை தரிசனம் செய்து
வெந்த வெண்ணீறனிந்து என்று துவங்கும் பாடலை பாடினார்
. திருஞானசம்பந்தர் கி.பி 630 முதல் 650 ஆண்டுவரை வாழ்ந்தார். ஞானசம்பந்தர் திருச்செங்கோட்டில் பல நாட்கள் தங்கியிருந்து இறைசேவை புரிந்து வந்தார். திருச்செங்கோட்டில் தேரடி வீதியில் உள்ள ஜோகி மடத்தில் தன் அடியவர்களுடன் தங்கியிருந்தார். குளிர்சுரம் நீங்கிய வரலாற்றின் அடையானமாக ஜோகி மடத்தில்
சுரகண்டநாதர் என்ற பெயரில் கற்சிலை ஒன்றை நிறுவி உள்ளனர்
. இன்றளவும் திருச்செங்கோடு பகுதியில்
காய்ச்சலால் துன்பப்படுபவர்கள் அங்கு சென்று இறைவனை வேண்டி மிளகு ரசம் சாதம் வைத்து வழிபாடு செய்து தங்கள் காய்ச்சலை குணமாக்கி கொள்வது நடைபெறுகிறது.
.
11 பாகங்களை கொண்ட பதிகம் கீழே தரப்பட்டுள்ளது:
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.